8 Jul 2024
தமுஎகச பொன்விழா ஆண்டு இலட்சினை வெளியீடு
8 Apr 2024
இப்போதில்லாவிட்டால்…
தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் வேண்டுகோள்
நாட்டின் விடுதலைக்காகத் தீரமுடன் போராடிய மக்களின் விருப்பார்வங்களிலிருந்து உருவான நமது அரசியல் சட்டத்தை ஒழித்துக்கட்ட, அன்னியராட்சிக்கு சேவகம் செய்து வந்தவர்களின் கூட்டுமுகமான பாஜக ஆட்சி தொடர்ந்து முயற்சித்துவருகிறது. அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கு ஒத்திசைவாகவும் சுதந்திரமாகவும் இயங்கவேண்டிய நாடாளுமன்றம்/ சட்டமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பாஜகவின் குறுகிய மதவாதத்திற்கும் கார்ப்பரேட் சுரண்டலுக்கும் கீழ்ப்படியும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டுள்ளன.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது மனித சுபாவம். எனவேதான் நமது அரசியல் சாசனம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அனைவருக்குமே உரிமையாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றமும்கூட கருத்துரிமையையும் விமர்சிக்கும் உரிமையையும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு கருத்தை வெளிப்படுத்திவிட்டு சுதந்திரமாக இருந்து விடவே முடியாது என்கிறது ஒன்றிய பாஜக ஆட்சி. மனிதநிலையிலிருந்து நம்மைத் தாழ்த்தும் இந்தக் கொடுங்கோல் ஆட்சியை இப்போது வீழ்த்தாவிட்டால் இனி தேர்தல் என்பதே பழங்கதையாகிப்போகும்.
தமது முற்போக்கான கருத்துகளுக்காக சமூகத்தின் நன்மதிப்பினைப் பெற்றிருந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்கள் அவர்களது கருத்துகளுக்காகவே சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள்.
ஒன்றிய பாஜக அரசு, தனது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்மீது விமர்சனமும் மாற்றுக்கருத்தும் கொண்டுள்ள ஆளுமைகள் பலரையும் பீமாகோரேகான் பொய்வழக்கில் சிக்கவைத்து ஆண்டுக்கணக்கில் சிறைவைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பெறத் துணைநின்ற ஸ்டேன்ஸ் சுவாமிக்கு கைதிக்குரிய உரிமைகளை மறுத்துச் சிறையிலேயே சாகடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியது. உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள் மீது உபா போன்ற கொடிய சட்டங்களைப் பாய்ச்சுகிறது. எஞ்சியுள்ள மக்களும்கூட நாட்டைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக உணருமளவுக்கு அரசின் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் மூர்க்கமடைந்து வருகின்றன. அச்சமற்று வாழ்வதற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் தடையாக உள்ள எதையும் எதிர்க்கிற இயல்புணர்விலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வதாக இந்தக் கூட்டறிக்கை அறிவிக்கிறது.
**
வாக்குரிமையின் மூலம் மக்கள் வழங்கியத் தீர்ப்புகளைத் திருடுகிறது பாஜக. தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற லஞ்சப்பணத்தை வாரி இறைத்து இதுவரை 182 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஒன்பது மாநில அரசுகளைக் கவிழ்த்து தனது ஆட்சியை அமைத்திருக்கிறது. தேர்தல் களத்தை சமமற்றதாக்கும் விதமாக எதிர்க்கட்சிகளின் வங்கிக்கணக்கை முடக்குவது, அரசின் பல அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களைச் சிறையிலடைப்பது என நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சிதைத்துவருகிறது பாஜக.
**
உணவு, உடை, மொழி, சமயம், தெய்வம், வழிபாட்டு முறை, நம்பிக்கை, கொண்டாட்டம், சடங்கு என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தனித்துவம் கொண்ட மக்கள் சமுதாயங்கள் இணங்கிவாழும் பேறுபெற்றது நம்நாடு. ஒளிரும் வானவில்லைப் போன்ற இந்தப் பன்மைத்துவம்தான் நம் நாட்டின் அழகு, வலிமை. அதனாலேயே விடுதலைப் போராட்டம் கட்டமைத்த மக்கள் ஒற்றுமைதான் இந்திய வளங்களிலேயே மிகவும் செறிவானதெனப் போற்றப்படுகிறது. ஆனால் இந்தப் பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் அடித்து நொறுக்கித் தட்டையாக்கி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கடவுள், ஒரே தேர்தல் எனும் ஒரே..ஒரே முழக்கங்களோடு ஒருநபர் வல்லாதிக்கத்தை நோக்கி நாட்டை நகர்த்துகிறது பாஜக.
**
சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பாஜகவின் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனியச்செய்துள்ளன. அகண்ட பாரதம் என்னும் அதன் முழக்கம் இறையாண்மையுள்ள அண்டைநாடுகளைச் சீண்டுவதாக உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், பட்டினியற்ற நிலை, கருத்துரிமை, ஊடகச் சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உலகளாவிய அளவில் இந்தியா பலபடிகள் பின்தங்கியிருப்பதற்கு பாஜக ஆட்சியே காரணம்.
கொரானா பேரிடரை அறிவியலுக்குப் புறம்பான வகையில் கையாண்டதுடன் அதையும் தனது இஸ்லாமிய வெறுப்பரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டது பாஜக ஆட்சி. பொது முடக்கக் காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்ட அது,
புலம்பெயர்த் தொழிலாளர்களை நிர்க்கதியாக்கி விரட்டியது. தமது நலன்களுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை பகைநாட்டுப் படையினர் போல சித்தரித்து தாக்குதல் நடத்தி பலரை கொன்றது.
உலகம் இதுவரை கண்டிராதபடி 7.5 இலட்சம் கோடி ரூபாயளவுக்கு நிதி முறைகேடுகளைச் செய்துள்ளது பாஜக ஆட்சி. அது தேர்தல் பத்திரம் மூலம் செய்துள்ள டிஜிட்டல் வழிப்பறியைப் பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் சமகாலத்திற்குரியதாக இருக்கவில்லை. அங்கு பெண்கள், தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினரது சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், வீடுகளை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குதல், அவர்களது வாழ்வாதாரங்களை முடக்குதல், அவர்கள் மீது வெறுப்பினைப் பரப்புதல் ஆகிய கொடூரங்கள் தீவிரமடைந்துள்ளன. மதப்பகைமையை உண்டாக்கி மக்களைப் பிளவுபடுத்திச் சமூகத்தை எப்போதுமே பதற்றத்தில் வைத்திருக்கும் பாஜக, தமிழ்நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் எவ்வகையிலும் ஏற்புடைய கட்சியல்ல. ஆனாலும் அந்தக் கட்சி அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு மறைமுகமாக நிழலாட்சி நடத்தி தமிழ்நாட்டின் நலன்களைக் காவுவாங்கியது.
**
தமிழர் பண்பாட்டின் தொன்மையை எடுத்தியம்பும் கீழடி அகழ்வாய்வைப் பாதியில் நிறுத்தியது, ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுத்தது, பிறப்பால் எவ்வுயிரும் சமம் என முழங்கிய திருவள்ளுவர், அய்யா வைகுண்டர், சன்மார்க்கர் வள்ளலார் ஆகிய பேராளுமைகளை சாதிய, சனாதனவாதிகளாகச் சிறுமைப்படுத்துவது, தமிழுக்குப் பெருமை சேர்த்த ராபர்ட் கால்டுவெல்லை இழிவுபடுத்துவது, நீட் விலக்கிற்கு ஒப்புதல் வழங்க மறுப்பது, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க மறுப்பது, பேரிடர்க்கால நிவாரணத்தொகையை வழங்க மறுத்தது என தமிழ் தமிழர் தமிழ்நாடு விரோதப்போக்குடன் செயல்படும் பாஜகவை இந்தக்காலம் முழுவதும் அதிமுகவும் பாமகவும் ஆதரித்து வந்துள்ளன. இஸ்லாமியரைத் தனிமைப்படுத்தும் நோக்குடன் திணிக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டம் அதிமுக பாமக ஆதரவினால் தான் நிறைவேறியது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் எதிராளிகளாகக் காட்டிக்கொண்டு இருவேறு கூட்டணிகளாக போட்டியிட்டாலும் இரண்டையும் நிராகரிப்பதே தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததாகும்.
இந்தியாவின் வரலாற்றை இந்தியத்தன்மையுடன் எழுதப்போவதாகச் சொல்லிக்கொண்டு அதற்குகந்த குழுவினை அமைத்துள்ளது பாஜக ஆட்சி. திராவிடர்களின் சிந்துவெளிப் பண்பாட்டை ஆரியப் பண்பாடாகவும், ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகளாகவும், தமிழ் உள்ளிட்ட இந்தியமொழிகள் அனைத்திற்கும் மூலமொழி சமஸ்கிருதமே என்றும் ஒரு கட்டுக்கதையை வரலாறு என்று திரிப்பதே இக்குழுவின் பணி. பாஜகவின் இந்த வரலாற்று மோசடிக்கு எதிரான தீர்ப்பினை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கி, சிந்துவெளிப் பண்பாட்டை ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்ததன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடங்குவோம்.
**
மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் பன்மைத்துவத்தையும் தனித்துவத்தையும் காப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பது எழுத்தாளர்கள் கலைஞர்களின் சமூகப்பொறுப்பு எனக் கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களும் அவ்வாறே இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.
எஸ்.வி. ராஜதுரை
அ. மார்க்ஸ்
வே.மு. பொதியவெற்பன்
பாமா
கவிஞர் இந்திரன்
க. பஞ்சாங்கம்
பெருமாள் முருகன்
பசு கவுதமன்
அரிமளம் சு. பத்மநாபன்
சமயவேல்
அ.ராமசாமி
மனுஷ்யபுத்திரன்
இமையம்
அறம்
கலாப்ரியா
சக்தி ஜோதி
சூர்யா சேவியர்
ஆழி செந்தில்நாதன்
நா. முருகேச பாண்டியன்
இரா. எட்வின்
கமலாலயன்
நீதிமணி
நக்கீரன்
யுக பாரதி
இரா. முருகவேள்
அ.முத்துக்கிருஷ்ணன்
மீரான் மைதீன்
யவனிகா
ஸ்ரீராம்
கீரனூர் ஜாகீர் ராஜா
கவின்மலர்
விஜய் ஆனந்த்
சம்சுதீன் ஹீரா
அ. பாக்கியம் சங்கர்
அ. ஜெகநாதன்
எம்.எம். தீன்
சுதீர் செந்தில்
மதிக்கண்ணன்
சுகுணா திவாகர்
கவிதா பாரதி
தமிழ்மகன்
விஷ்ணுபுரம் சரவணன்
புலியூர் முருகேசன்
பழநி ஷஹான்
அரி சங்கர்
யெஸ். பாலபாரதி
காமாட்சி
சக்தி சூர்யா
ந. இளங்கோ
சிலம்பு செல்வராஜ்
இ.பா. சிந்தன்
முகம்மது யூசுப்
ஷக்தி
நிவேதிதா லூயிஸ்
மதுக்கூர் ராமலிங்கம்
ஆதவன் தீட்சண்யா
அருணன்
ச.தமிழ்ச்செல்வன்
சிகரம் செந்தில்நாதன்
சைதை
ஜெ
நந்தலாலா
உதயசங்கர்
இலட்சுமிகாந்தன்
நாறும்பூநாதன்
எஸ்.ஏ. பெருமாள்
பக்தவச்சலபாரதி
சு.பொ. அகத்தியலிங்கம்
மயிலை பாலு
பிரளயன்
எம். சிவக்குமார்
வெண்புறா
சரவணன்
கா. பிரகதீஸ்வரன்
ரோஹிணி
நவகவி
ஜீவி
தேனிசீருடையான்
ஸ்ரீரசா
முத்துநிலவன்
சுந்தரவள்ளி
அ.உமர்பாரூக்
ம.காமுத்துரை
ஜா.மாதவராஜ்
மலர்விழி
அய். தமிழ்மணி
ஆர். நீலா
ஏகாதசி
அ.கரீம்
எஸ்.இலட்சுமணப்பெருமாள்
ஜனநேசன்
கரிசல் குயில் கிருஷ்ணசாமி
இரா.தெ.முத்து
கிருஷி
எஸ்.காமராஜ்
கோவை சதாசிவம்
இரா.
தனிக்கொடி
மு.முருகேஷ்
தக்கலை ஹலீமா
நிறைமதி
அ. பகத்சிங்
இக்பால்
சோழ நாகராஜன்
மதுரை நம்பி
அல்லி உதயன்
மு. ஆனந்தன்
நா.வே. அருள்
சிராஜுதீன்
அருள் செல்வி
முரசு ஆனந்த்
இளங்கோ கார்மேகம்
ஜீவபாரதி
கரன் கார்க்கி
ச.மதுசுதன்
செந்தில்
ராஜமாணிக்கம்
ராஜசங்கீதன்
ராஜிலா ரிஸ்வான்
நேசமித்திரன்
பெ.ரவீந்திரன்
எஸ். சண்முகம்
சிந்து ஜா
அமர்நாத்
தவில் விநாயகம்
ச. ப்ரியா
தங்கமுருகேசன்
ஜின்
பூபாளன்
அரவிந்த் ரவிச்சந்திரன்
லி.பா. சாரதி
ராசி.பன்னீர்செல்வம்
கவிஞர் கதிரை
ஜீவசிந்தன்
வல்லம் தாஜுபால்
ஓவியர் சரண்ராஜ்
ஓவியர் உமாபதி
பா. மகாலட்சுமி
முனைவர் இராச. கலைவாணி
நீலமேகம்
கவிஞர் ராசாராமன்
இளம் கவிஞர் சத்தியபிரியன்
பாடகர் உத்தமன்
வைகறை மஞ்சுளா
ரத்தின விஜயன்
சசி ரேகா
சரவணகாந்த்
22 Mar 2024
கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதா? - தமுஎகச கண்டனம்
1 Feb 2024
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2023
15 Nov 2023
தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு தமுஎகச புகழஞ்சலி
10 Oct 2023
தமுஎகச மாநிலச்செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்
19 Sept 2023
நூற்றாண்டு காணும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களைப் போற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
4 Sept 2023
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையைத் திரிக்கும் மோசடி
சனாதன ஒழிப்பு மாநாடு - தீர்மானங்கள்
சனாதன ஒழிப்பு மாநாடு
2023 செப்டம்பர் 2, காமராசர் அரங்கம், சென்னை
தீர்மானங்கள்
1. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டை தொகுத்தெழுதிய மநுவின் சிலை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வாய வளாகத்தில் 1989ஆம் ஆண்டு முதல் இருப்பது அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு விரோதமானது. எனவே அதை உடனடியாக அகற்ற வேண்டும்.
2. அரசியல் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இயங்க வேண்டியவையே அரசு அலுவலகங்கள். எனவே அனைத்துவழிகளிலும் மதச்சார்பின்மையைக் கடைபிடிப்பது அவசியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுகுறித்து தெளிவான அரசாணைகள் இருந்தும் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, பூமி பூசை, புதிய கட்டிடத் திறப்புக்கு புண்ணியார்த்தனம், யாகங்கள், வார இறுதிப் பூசை, விநாயகர் சதுர்த்தி போன்ற ஒரு மதத்தின் சார்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்படியான பூசைகள் மூலம் பார்ப்பனியச் சடங்குகளின் பிடியில் அரசு அலுவலகங்கள் சிக்குண்டு கிடக்கின்றன. பெரும்பான்மையாக உள்ளவர்களின் மத நடவடிக்கைகள் இயல்பானவை என்கிற நிலையை உருவாக்குவது அரசியல் சட்டம் உயர்த்திப்பிடிக்கும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. எனவே இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும்.
3. அரசு அலுவலக வளாகங்களுக்குள் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டிடத்தையும் அரசு அலுவலகம் நிர்வாகிக்கக் கூடாது. புதியதாக எந்தவொரு வழிப்பாட்டுத்தலம் அமைப்பதையும் அனுமதிக்கக்கூடாது.
4. இறை நம்பிக்கை, மத ஈடுபாடு என்பவை குடிமக்களின் தனிப்பட்ட விருப்பம். அரசைப் பொறுத்தவரை மதச்சார்பற்றது. எனவே, மதம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அமைச்சர்களோ அரசு அலுவலர்களோ ஊழியர்களோ அவர்களுடைய பணிசார்நிலையில் கலந்து கொள்ளக்கூடாது. அனைத்து மக்களுக்குமான இவர்கள் தமது சொந்த சாதி அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கெடுப்படுப்பதும் கூடாது.
5. வாழ்விடங்களும் வழிபாட்டிடங்களும் சாதி அடிப்படையில் பிரிந்திருப்பதைப் போலவே மயானங்களும் பிரிந்திருக்கின்றன. இந்தப் பிரிவினையின் காரணமாக சமரசம் உலாவும் இடம் எனச் சொல்லப்படும் மயானங்களிலேயே கடும் மோதல்கள் உருவாகின்றன. இந்நிலையைத் தவிர்க்க எல்லா ஊர்களிலும் பொது மயானம் அமைக்கப்பட வேண்டும். ஒரு ஊர் ஒரே சுடுகாடு/ இடுகாடு என்கிற நிலை எட்டப்பட வேண்டும். அதற்கான மன ஏற்பை வளர்க்க மக்களிடையே பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.
6. சனாதனத்தின் கோரவடிவமான சாதியம் நீடித்திருப்பதன்
முதன்மைக் காரணியாக இருப்பது அகமணமுறையாகும். நாட்டில் சாதி கலப்புத் திருமணம்
மிகக்குறைவாக நடக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது கவலையளிக்கக்
கூடியதாகும். சாதிய அமைப்புகள் தம் சாதி இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் வேறு
சாதியினரை திருமணாம் செய்துகொள்ளமாட்டேன் என்று கோவிலில் வைத்து வெற்றிலைச்
சத்தியம் வாங்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வாழ்க்கைத்துணையை சுதந்திரமாக
தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுத்துவருகின்றன. சாதியாணவக்கொலைகள் மூலம் சாதி
கலப்ப்பு/ மறுப்புத் திருமணத்தின் மீது அச்சம் உருவாக்கப்படுகிறது.
அகமண முறையை விட்டுவிடுதலையாகி வெளியேற விரும்புவோர் கைக்கொள்ளும்
நடைமுறைதான் சாதிமறுப்புத் திருமணம். இதனைப் பெற்றோரும் உறவினர்களும்
எதிர்ப்பது மட்டுமின்றி வாடகைக்கு வீடுதர மறுப்பது உட்பட பல வகையில்
புறக்கணிக்கும் நிலை உள்ளது. திருமணப் பதிவிலும் ஏராளமான இடையூறுகள், கடுமைகள். இவையெல்லாம் சாதியத்தைக் கெட்டிப்படுத்துவற்கான திட்டங்களே.
எனவே, சாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொள்வோரின் அச்சம் அகற்றும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அரசே காதலர் புகலிடங்களை உருவாக்க வேண்டும். அவர்களை சாதி/சமய மறுப்பாளர் என அறிவித்து அவர்களின் குழந்தைகளுக்குக் கட்டாய, கட்டணமில்லா கல்வி வழங்கி வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
7. குடும்பங்களில் தான் அதிகமும் பார்ப்பனியச் சடங்குகள் நடக்கின்றன. குடும்பங்களில் உரையாடி இச்சடங்குகளை நிறுத்தினாலே பார்ப்பனியத்தின் உயிர்நாடியான சடங்குகள் அழிந்துவிடும்.
8. பார்ப்பனியச் சடங்குகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு வாழ்க்கை நெறிகளையும் கொண்டாட்டங்களையும் உருவாக்குவதற்கு தமிழர் பண்பாட்டில் தோய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.
9. பெயர் சூட்டும் விழா பொதுவாக பார்ப்பனச்சடங்குகளின்றியே நடைபெறுகிறது என்றாலும் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத மயமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்ப்பெயர்களைச் சூட்ட வேண்டும்.
10. புதுமனை புகுவிழாக்களில் நடக்கும் கணபதி ஹோமம் என்ற பார்ப்பனச் சடங்கு வீட்டின் தீட்டைக் கழிக்கும் சடங்கு அனைத்து சாதியினரும் சேர்ந்து கட்டிய வீடு தீட்டுப்பட்டது என்று அந்த தீட்டை கழிக்கும் சடங்காகவே, புனிதப்படுத்தும் சடங்காகவே நடக்கிறது என்பதால் அந்த சடங்கைத் தவிர்த்து புதுமனை திறப்பு விழா என்று நடத்தலாம்.
11. பூப்புனித நீராட்டு விழா என்ற சடங்கினை நடத்த நடத்த வேண்டிய அவசியமே இல்லை. பெண்குழந்தைகள் பருவமடைவதை தீட்டாகப் பார்த்து தீட்டு கழிக்கும் இந்தப் பார்ப்பனியச் சடங்கினை கைவிட வேண்டும்.
12. இறப்புச்
சடங்குகள் முழுக்கவும் இறப்பு என்கிற இயற்கை நிகழ்வை தீட்டு எனக் கருதி
பார்ப்பனியச் சடங்கினால் புனிதப்படுத்தப்படுவதாக நடக்கின்றன. மரணம் தீட்டானதல்ல
என்றும் உடல் தானம் செய்வதை ஊக்கப்படுத்தியும் பரப்புரை மேற்கொள்வதன் மூலம்,
இந்தச் சடங்குகளில் பெரும்பாலனவற்றை தவிர்க்க முடியும்.